எரியும் எண்ணங்கள்!

Thursday 2 June 2011

ஈழத் தமிழரும், ஈனத் தமிழரும்!!!

கோடிகளாய் கொட்டியிங்கு மேடை போட்டுக்,
     கொக்கரித்துக் கத்துவதே தமிழா? சொல்வீர்!
கூடமதில் தமிழரங்கு குலையாய்ச் சாயக்,
     குளிர்பதன அறையினிலே கூடும் நம்மோர்!!
மாடமதில் வாகனங்கள் முற்றும் விட்டு,
     மண்காக்கத் துயரேந்தும் மக்கள் அங்கே!
நாடதனை நாடாது நாமும் வாழ்ந்தால்,
     நானிலமும் நற்றமிழர் வாழ்வை ஏசும்!!!

சிரித்துநமைச் சீரழிக்கும் சீலம் இல்லா,
     பொருட்பெண்டிர் பொய்யான இன்பம் போன்று,
விரித்துவைத்த மேடையிலே வீணாய்க் கத்தும்,
    விபச்சாரப் பேச்சாளர் தேவை இல்லை!!!
சரியெனவும், தவறெனும் திருத்தி நம்மை,
     சீர்படுத்தும் சிந்தனையே தேவை இங்கே!!!
அரிதாரம் அதுகண்டு மயங்கி டாது,
     அறிவுடனே செயல்பட்டால் வாழும் வையம்!!!

பாவகை : எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!





1 comment:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_03.html

    ReplyDelete